‘இயக்குநர் ராஜமௌலியை கொல்ல திட்டம் நடக்கிறது, அதில் நானும் ஒருவன்…’- மது போதையில் உண்மையை உளரிய பிரபல இயக்குநர்.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் பட்டியலில் ராஜமௌலிக்கு என தனி இடம் உண்டு. அந்த வகையில் பிரபல இயக்குநராக வலம்வரும் ராஜமௌலிக்கு ட்விட்டர் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பு ட்வீட் ஒன்றை பகிரந்துள்ளார் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான ‘ராம்கோபால் வர்மா’.
பாகுபலி படங்கள் மூலமாக புகழின் உச்சிக்கு சென்ற இயக்குநர் ராஜமௌலி கடைசியாக ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிலையில் அந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி சென்றது, அதனை தொடர்ந்து மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்ட நாமினேஷன் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ramgopal Varma threatens Rajamouli : ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல இயக்குனர்... குடிபோதையில் ட்விட்டர் பதிவு...https://t.co/kUFisqdMcR#RamGopalVerma #Rajamouli
— ABP Nadu (@abpnadu) January 25, 2023
இந்த நிலையில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டர் பதிவு பல சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது, அதி அவர் கூறியுள்ளதாவது” ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன் தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்” என அவர் மிரட்டல் விடுத்துள்ளது பல சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.