புஷ்பா 2 படம் குறித்து உருகி பேசிய ராஷ்மிகா
![புஷ்பா 2 படம் குறித்து உருகி பேசிய ராஷ்மிகா](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/2d325ff457fd218a4a31454cc4d01c69.jpg)
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியானது. படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளியாகும் என படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. புஷ்பா 2 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், புஷ்பா குறித்து பேசிய ராஷ்மிகா, கதாபாத்திரத்திற்கு கூடுதல் பொறுப்பும் சேர்ந்துள்ளது. புஷ்பா படப்பிடிப்பு தளம் என் வீடு போல மாறி விட்டது. இன்னும் சில நாட்களில் நாங்கள் பிரியப்போவதை நினைத்தால் மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.