‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு 80 கோடி செலவா ?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமௌலி மகன் !

ஆஸ்கர் விருதுபெற 80 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக வந்த தகவலுக்கு ராஜமௌலியின் மகன் விளக்கமளித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவிலும் பங்கேற்று விருதை தட்டி சென்றது. ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதை இசையமைப்பாளர் கிரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இணைந்து பெற்றுக்கொண்டன
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்ற விழாவிற்காக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு சார்பில் இயக்குனர் ராஜமெளலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாடலாசிரியர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதற்கிடையே ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஆஸ்கர் விருதை வெல்ல 80 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தனியார் இணையத்தள ஊடகத்திற்கு ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆஸ்கர் விருதுக்கான 5 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தோம். அதன் ஒரு பகுதியாக முதலில் 2 கோடி முதல் 3 கோடி வரை செலவு செய்ய இருந்தோம். படம் இறுதிப்போட்டிக்கு தேர்வானதால் பட்ஜெட்டை உயர்த்தி 8.5 கோடி வரை செலவு செய்தோம் என்று கூறினார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.