அனிமல் படத்திற்கு தொடர்ந்து எழும் எதிர்ப்பு

அனிமல் படத்திற்கு தொடர்ந்து எழும் எதிர்ப்பு

விமர்சனங்கள் எழுதும் ஜோக்கர்களை பிடிக்காது என அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. கடந்த 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

அனிமல் படத்திற்கு தொடர்ந்து எழும் எதிர்ப்பு

அந்த வகையில், திரைப்பட விழாவில் பேசிய புகழ்பெற்ற கதாசிரியர் ஜாவெத், ஒரு திரைப்படத்தில் பெண்ணை அறைவது தவறில்லை என கூறி படம் வெற்றிபெற்றதால் அது மிகவும் ஆபத்தானது. எந்த படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கு ரசிகர்கள் தான் பொறுப்பு என அனிமல் படத்தை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அனிமல் படக்குழு, நீண்ட அனுபவம் கொண்ட உங்களுக்கு ஒரு படத்தில் ஏமாற்றப்பட்ட காதலனின் மன உணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், உங்கள் கலைப்படைப்பு அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார். 
 

Share this story