'தி கேரள ஸ்டோரி' படத்திற்கு தடை ?... முதல்வர் எடுத்த அதிரடி முடிவு !

the Kerala story

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த படத்திற்கு அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.‌

the Kerala story

கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இப்படத்தை மேற்கு வங்கத்தில் வெளியிட தடை விதித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

 

 

Share this story