‘வாத்தி’ பட இயக்குநருடன் கை கோர்க்கும் மற்றுமொரு சூப்பர் ஹிட் பிரபலம்.
![photo](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/0cf814a4adfd7f5135de773ceac1789b.jpeg)
மிஸ்டர் மஜ்னு படத்தின் மூலமாக பிரபலமான இயக்குநர் வெங்கி அட்லூரி, தனுஷை வைத்து ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். இதனை தொடர்ந்து இவர் பிரபல சூப்பர் ஹிட் நடிகருடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் யார் என்றால், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து மாஸ்காட்டிவரும் ‘துல்கர் சல்மான்’ தான். துல்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் துல்கர் நேரடி தமிழ் படம் ஓன்றிலும் கையெழுத்திட்டுள்ளாராம், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாத்தி படத்தை தொடர்ந்து, துல்கர்-அட்லூரி இணையும் இந்த படத்தையும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கி சித்தாரா நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். முதல் படம் ரங்டே என்பது குறிப்பிடத்தக்கது.