உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்துள்ள அமிதாப் பச்சன்!

உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்துள்ள அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குரோர்பதி 12 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அமிதாப் பச்சன் குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒவ்வொருவராக கொரோனாவிலிருந்து மீண்டனர். தற்போது அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.

Image

அமிதாப் பச்சன் தற்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் குரோர்பதி 12 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். மாஸ்க் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமிதாப் பச்சன் “வாருங்கள், தம்பி இந்த முகமூடியை அணிந்து, பதினைந்து மணி நேரம், வேலை செய்ய வேண்டும் இது தான் எனது வாழ்க்கை” என்று தெரிவித்துள்ளார்.

தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ள அமிதாப் பச்சன் பச்சை கலர் ரிப்பன் அணிந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்..

கேபிசி 12 இன் புதிய சீசன் படப்பிடிப்பு செப்டம்பர் 28 முதல் தொடங்கியது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைபிடித்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Share this story