×

பிரம்மாண்ட படங்கள் மட்டுமே… 100 கோடி வரை சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்!

பிரபாஸ் தான், தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார். பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் 300 கோடி, 400 கோடி என பட்ஜெட்டில் பிரம்மாண்டம் காண்பித்து வருகின்றன. பாஹுபலி என்ற ஒற்றைப் படத்திற்காக மட்டும் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தது வீண் போகவில்லை. அப்படம் பிரபாஸை உலகளவில் பிரபலமாக்கியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார். இதுவரை தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படங்களில்
 

பிரபாஸ் தான், தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார். பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் 300 கோடி, 400 கோடி என பட்ஜெட்டில் பிரம்மாண்டம் காண்பித்து வருகின்றன. பாஹுபலி என்ற ஒற்றைப் படத்திற்காக மட்டும் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தது வீண் போகவில்லை. அப்படம் பிரபாஸை உலகளவில் பிரபலமாக்கியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.

இதுவரை தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படங்களில் 400 கோடி வரை சம்பளம் பேசியுள்ளாராம் பிரபாஸ். மேலும் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் இதுவரை இல்லாத பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது.

பிரபாஸ் தற்போது தன்னுடைய சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்திவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிரபாஸ் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகராகவும் மாறியிருக்கிறார். மும்பையில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பிரபாஸுக்கு ஒரு படத்திற்கு மட்டுமே நூறு கோடி தரத் தயாராக உள்ளனவாம்.

பிரபாஸ் தற்போது நடித்து வரும் ராதே ஷியாம், சலார்,ஆதிபுருஷ் ஆகிய படங்களுக்கு 100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி பிரபாஸுக்குத் தான் போகும் போல!