×

ஷங்கர் படத்தில் நேர்மையான அதிகாரியாக ராம் சரண்… புதிய அப்டேட் வெளியானது…

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர்,‘இந்தியன் 2’ படத்தை உருவாக்கி வந்தார்.படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றபோது, ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டது. அதனால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் லாக்டவுன், கமலின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட காரணத்தால் இதுவரை படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனால் ஷங்கர் அடுத்த படத்தில் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார். தெலுங்கு முதல் முறையாக ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
 

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர்,‘இந்தியன் 2’ படத்தை உருவாக்கி வந்தார்.படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றபோது, ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டது. அதனால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் லாக்டவுன், கமலின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட காரணத்தால் இதுவரை படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இதனால் ஷங்கர் அடுத்த படத்தில் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார். தெலுங்கு முதல் முறையாக ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கிறது. ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ராம் சரண் முதலமைச்சராக நடிகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இதையடுத்து மற்றொரு தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.ராம் சரண், படத்தின் துவக்கத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், பின்னர் ஊழல் செய்யும் முதலமைச்சருக்கு எதிராக சண்டையிடுகிறார். அதன்பிறகு தானே ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதியாக மாறி முதலமைச்சர் ஆகிறார். இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.