ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் தெலுங்கு நடிகர் ராம் சரண் உடன் இணைந்து பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷங்கர் வெளியிட்டுள்ளார். ராம் சரண் நடிக்கும் 15-வது படம் இது.

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

இப்படம் வரலாற்றுக் கதை கொண்ட படமாக இருக்கும் எனவும், 2022 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் இப்படம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் பிற பிரபல நட்சத்திரங்களுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படமாக்கப்படும்.

தற்போது ராம் சரண் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து இந்தப் படத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கர் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் படம் சில காலத்திற்கு முடங்கியது. பின்னர் கொரோனா காரணமாக பல மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படத்தை மீண்டும் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this story