×

“நான் ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை”… பிரபல இயக்குனர் அதிரடி விளக்கம்!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து, அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார். மேலும் தனக்காக ஒரு கதை எழுதுமாறும்
 

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து, அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார். மேலும் தனக்காக ஒரு கதை எழுதுமாறும் கேட்டுக்கொண்டார். அதிலிருந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ரஜினி அண்ணாத்த படத்தை அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

தற்போது அதுகுறித்து தேசிங்கு பெரியசாமி விளக்கமளித்துள்ளார். “எனது அடுத்த படம் பற்றி பரவி வரும் செய்திகள் உண்மையல்ல. விரைவில் எனது படம் குறித்து அறிவிப்பேன். அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.