×

அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன் – ‘கர்ணன்’ படம் குறித்து ரெஜிஷா விஜயன் நெகிழ்ச்சி…

நான் இந்த படத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் உருவாக்கினார் என்று ரெஜிஷா தெரிவித்துள்ளார். தனுஷ் – மாரி செல்வராஜ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் 9ம் தேதி இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகிறது. இந்நிலையில் ரெஜிஷா விஜயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் நடித்த
 

நான் இந்த படத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் உருவாக்கினார் என்று ரெஜிஷா தெரிவித்துள்ளார்.

தனுஷ் – மாரி செல்வராஜ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் 9ம் தேதி இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகிறது.

இந்நிலையில் ரெஜிஷா விஜயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் நடித்த ‘ஜுன்’ படம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிடித்திருந்தது. இதனால்தான் ‘கர்ணன்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திற்கு சென்று கதை கேட்டேன். கதை கேட்டவுடன் பிடித்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.


மேலும் ஒரு படத்தில் நடிக்க கதாபாத்திரமே, அலங்காரமோ தேவையில்லை. உடல் தோற்றத்திற்கு ஏற்றாற்போல் காஸ்டியூம் இருந்தால் மட்டும் போதுமானது. நான் இந்த படத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் உருவாக்கினார். இந்த படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. ஷூட்டிங் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே அந்த கிராமத்திற்கு சென்றுவிட்டேன். இதனால் அங்கு உள்ள மக்களால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன் என்று கூறினார்.