×

‘மாநாடு’ படத்தை அடுத்து மேடை நாடகங்களில் நடிக்க விரும்பும் சிம்பு!

மாநாடு படத்தை அடுத்து சிம்பு மேடை நாடகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அரசியல் களத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. தற்போது சிம்பு பற்றி சில தகவல்களை ஒய்ஜி மகேந்திரன் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் முதல்
 

மாநாடு படத்தை அடுத்து சிம்பு மேடை நாடகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அரசியல் களத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

தற்போது சிம்பு பற்றி சில தகவல்களை ஒய்ஜி மகேந்திரன் பகிர்ந்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் மாநாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வெங்கட் பிரபுவின் படங்கள் பிடிக்கும் என்பதால், நாங்கள் இருவரும்காமெடி களம் என்பதில் பயணம் செய்வதால் அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக, கொரோனா பரவல் காரணமாக, படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது, தற்போது முழு வேகத்தில் நடக்கிறது. தற்போது என்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்த முடியாது.

ஆனால் ஸ்கிரிப்ட்டில் பல திருப்பங்கள் இருப்பது உறுதி. சிம்புவுடன் நான் பல காட்சிகளில் காணப்பட்டாலும், எஸ்.ஜே.சூர்யாவுடனான காட்சிகளில் தான் எனக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வாலி படம் முதல் எஸ்.ஜே. சூர்யாவைப் பற்றி நான் கேள்விப்பட்டு வருகிறேன், அவருடன் முதல்முறையாக நடித்துள்ளேன். எங்கள் கூட்டணி பற்றி படம் வெளியான உடன் அதிகம் பேசப்படும்.

ன்னான் சிம்புவை அவரது சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். அவருடன் நான் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்திலும் நடித்திருந்தேன். அந்த படத்தில் குறைந்த நேரமே நான் தோன்றியிருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அதிக நேரம் காணப்படுவேன். சிம்பு பற்றி எனக்கு நிறைய தெரியும். அவர் ஒரு திறமையான நபர். மாநாடு திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும்.

படப்பிடிப்பில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் இதுபோன்ற கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தால், அவர் இன்னும் அதிக உயரங்களை அடைவார். இந்த படத்தை முடித்ததும் என்னுடன் மேடை நாடகத்தில் நடிக்க விரும்புவதாக சிம்பு என்னிடம் கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.