×

கொரோனாவை வெல்ல நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உதயநிதி!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த நிலையில் நம்மைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக கொரோனா தடுப்பூசி பார்க்கப்படுகிறது. எனவே அரசு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் இணைந்து தடுப்பூசியின் அத்தியாவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கொரோனா தடுப்பின்
 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்.

கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த நிலையில் நம்மைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக கொரோனா தடுப்பூசி பார்க்கப்படுகிறது. எனவே அரசு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் இணைந்து தடுப்பூசியின் அத்தியாவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி” என்று தெரிவித்துள்ளார்.