×

‘நெற்றிக்கண்’ ப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? நயன்தாரா வெளியிட்ட புதிய தகவல்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த இரு படங்களுக்கு முன்பு நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை ‘அவள்’ படத்தின் இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். நயன்தாராவுக்கு ஜோடியாக அஜ்மல்
 

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த இரு படங்களுக்கு முன்பு நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை ‘அவள்’ படத்தின் இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

நயன்தாராவுக்கு ஜோடியாக அஜ்மல் நடித்துள்ளார். ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழு ஷூட்டிங்கும் முடிந்து தற்போது போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்ட பணியில் உள்ள இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. ஆனால் கொரானா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதை வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.