×

பிரபல இயக்குனருக்கு சர்ப்ரைஸ்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீனின் பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம். ‘மூடர் கூடம்’ என்ற வித்தியாசமான படத்தை எடுத்து அனைவரின் கவனத்தை பெற்றவர் இயக்குனர் நவீன். பன்முக திறமைக் கொண்ட இவர், அடுத்த படைப்பாக ‘அலாவுதீனும் அற்புதக் கேமராவும்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
 

‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீனின் பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்.

‘மூடர் கூடம்’ என்ற வித்தியாசமான படத்தை எடுத்து அனைவரின் கவனத்தை பெற்றவர் இயக்குனர் நவீன். பன்முக திறமைக் கொண்ட இவர், அடுத்த படைப்பாக ‘அலாவுதீனும் அற்புதக் கேமராவும்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் நவீன் பிறந்தநாளையொட்டி பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்த சிறப்பான ஈகைத் திருநாளில் இரண்டு புதிய படங்களில் இயக்குநர் நவீனுடன் இணைவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்றோம். விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘அக்னிச் சிறகுகள்‘ படத்துக்குப் பிறகு இந்த படங்கள் உருவாகும். நவீனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்று அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.