×

திட்டமிட்டபடி வெளியாகிறது செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் 5ம் தேதி வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ரெஜினா, நந்திதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. 3 ஆண்டுகளாக பைனான்ஸ் பிரச்சனை
 

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் 5ம் தேதி வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ரெஜினா, நந்திதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது.

3 ஆண்டுகளாக பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் இருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வரும் மார்ச் 5ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட’ படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் இந்த படத்தை வெளியிடக்கூடாது என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து திட்மிட்டபடி இந்த படம் வெளியாகுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், திட்டமிட்டபடி வரும் 5ம் தேதி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அமைந்துள்ளனர்.