×

‘மாநாடு’ படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ள வெங்கட் பிரபு!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முற்றிலும் அரசியலை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மாநாடு படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து படத்திலிருந்து எந்த அப்டேட்-ம் வெளியாகவில்லை. இந்நிலையில்,
 

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முற்றிலும் அரசியலை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

மாநாடு படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து படத்திலிருந்து எந்த அப்டேட்-ம் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநாடு படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.

“கடைசி கட்ட படப்படிப்பு மட்டுமே மீதமுள்ளது. நிறைய பேர் கலந்துகொள்ளும் காட்சிகள் இறுதியாக படமாக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு 12 முதல் 15 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விடுவோம். படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். மேலும் மற்ற ரசிகர்களைப் போலவே தானும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.