×

அந்த டீசர் வந்தது எனக்கே தெரியாது… விஜய் சேதுபதி படத்தில் நடந்த குழப்பம்!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த டீசருக்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் என்பவர் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, விஸ்வகுமார், மகிழ் திருமேனி உள்ளிட்ட
 

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த டீசருக்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் என்பவர் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, விஸ்வகுமார், மகிழ் திருமேனி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நேற்று மாலை தான் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் இந்த டீசர் வெளியீடு பற்றி எனக்கே தெரியாது என்று படத்தின் இயக்குனர் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“அன்பார்ந்த face book நண்பர்களுக்கு…மன்னிக்கவும்…இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை.அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.திரும்பவும் மன்னிக்கவும்நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன்.உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது.தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன்.தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியும் கூட டீசரின் லிங்கை மட்டும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.