×

விரைவில் தொடங்கும் விஷால் படத்தின் படப்பிடிப்பு .. புதிய அப்டேட் !

நடிகர் விஷால் – து.பா.சரவணன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு
 

நடிகர் விஷால் – து.பா.சரவணன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது. ‘நாட் காமன் பேன்’ என்ற பெயரில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படத்தில் நடித்த டிம்பிள் ஹயாத்தி நடிக்க உள்ளார். விஷால் 31வது படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து உடனடியாக படத்தை தொடங்க படக்குழுவினர் தயாராகி வந்தனர். ஆனால் கொரானா ஊடரங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரானா தாக்கம் குறைய தொடங்கியுள்ளதால் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விரைவில் தொடங்க உள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு படத்தை 40 முதல் 50 நாள்களுக்குள் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.