விஷால் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ?.. வெளியான அப்டேட்…

விஷால் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ?.. வெளியான அப்டேட்…

விஷால் – து.பா.சரவணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ?.. வெளியான அப்டேட்…

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எனிமி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் விஷால். இந்த படத்தில் ஆர்யாவுடன் விஷால் இணைந்து நடிப்பது எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ?.. வெளியான அப்டேட்…

இதையடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மோஷன் போஸ்டராக வெளியான அந்த அறிவிப்பில் ‘நாட் காமன் பேன்’ என்று தலைப்பு இருந்தது. வி.எப்.எப் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் து.பா சரவணன் இயக்கவுள்ளார். இதில் பிரபுதேவா நடித்த தேவி 2 படத்தில் நடித்திருந்த டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடிக்க உள்ளார். விஷால் 31 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

விஷால் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ?.. வெளியான அப்டேட்…

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், இயக்குனர் து.பா.சரணவன், நடிகை டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே 12ம் தேதி ஷூட்டிங்கை சென்னையில் தொடங்க உள்ளனர். கொரானா காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றி இந்த ஷூட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.

Share this story