×

து.ப.சரவணன் – விஷால் கூட்டணியில் புதிய படம்…. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு…

விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.‘எனிமி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஆர்யா நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகைகள் மிருணாளி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள படக்குழு,தற்போது தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதையடுத்து தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார் விஷால்.
 

விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.‘எனிமி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஆர்யா நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகைகள் மிருணாளி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள படக்குழு,தற்போது தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இதையடுத்து தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார் விஷால். வி.எப்.எப் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் து.பா சரவணன் இயக்கவுள்ளார்.இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷால் 31 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘தற்கொலை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

இதற்கிடையே இந்த படத்திற்கான அறிவிப்பு, மோஷன் போஸ்டராக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அந்த போஸ்டரில் நாட் காமன் பேன் என வித்தியாசமான டைட்டில் இருந்தது.இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால்,இயக்குனர் து.பா.சரவணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட னர். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.