கொடூர வில்லன் லுக்கை மாற்றியுள்ளேன் – ‘அண்ணாத்த’ குறித்து ஜெகபதி பாபு பெருமிதம்

கொடூர வில்லன் லுக்கை மாற்றியுள்ளேன் – ‘அண்ணாத்த’ குறித்து ஜெகபதி பாபு பெருமிதம்

கொடூர வில்லன் லுக்கை ‘அண்ணாத்த’ படத்திற்காக மாற்றியுள்ளதாக நடிகர் ஜெகபதி பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொடூர வில்லன் லுக்கை மாற்றியுள்ளேன் – ‘அண்ணாத்த’ குறித்து ஜெகபதி பாபு பெருமிதம்

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஜெகபதி பாபு நடித்து வருகிறார். ஆனால் வழக்கத்துக்கு மாறான இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்காமல் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு தனது லுக்கை மாற்றி உள்ளாராம். இதை தனது இன்ஸ்ட்கிராமில் பக்கத்தில் அவரே குறிப்பபிட்டுள்ளார். இது குறித்து ஒரு விளக்கவுரையும் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினி சார் படத்திற்காக கொடூரமான வில்லன் லுக்கை மாற்றி இருக்கிறேன். அரவிந்த சமேதா படத்தின் பாசி ரெட்டி லுக்கை மாற்றியிருப்பதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Share this story