ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் என்றால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது! இத்தனைக்கும் அவர் நடிகர் கிடையாது.ஆனாலும் பாமர சினிமா ரசிகர்களுக்கும் தெரிகிற அளவுக்கு அவர் பற்றி வரும் செய்திகள் அவ்வளவு பிரபலம்!

ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

தமிழ் சினிமாவில் கையில் சொந்தமாக பணம் வைத்து படம் எடுப்பவர்கள் வெகு சிலர்தான்.பாக்கியுள்ள தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் ஆபத்பாந்தவன் அன்புசெழியன்தான்.புராஜெக்டின் வேல்யூ,தயாரிப்பாளரின் நேர்மை இரண்டும் சரியாக ஒரு மணி நேரத்தில் எத்தனை கோடி வேணாலும் கொடுப்பார் என்பதுதான் இவரது பலம்.படத்துக்காக கடனாக பணம் வாங்குபவர்கள் இவரோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.பணம் கைக்கு வந்ததும் அதை முறைகேடான விசயத்துக்கு பயன் படுத்துகிறவர்கள்தான் சிக்கலில் மாற்றுகிறார்கள்.அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

எந்த தொழிலாக இருந்தாலும் கொடுத்த பணத்தை முறையாக செலுத்தவில்லை என்றால் பேங்க் ஆட்கள் சிலரும் அத்துமீறி நடந்துகொள்வதும் அந்த மன உளைச்சலில் தற்கொலை செய்தவர்களும் உண்டு என்பதை சமீபகாலமாக அதிகமாகவே பார்க்கமுடியும். அன்பும் அப்படித்தான்,பணம் கொடுக்கவில்லை என்றால் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவார் என்று சினிமா வட்டாரங்களில் எப்போதும் பேச்சு உண்டு.

ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

ஆனால்,லேட்டஸ்ட்டாக அவர் செய்த ஒரு காரியம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த செய்தி.’ முத்துக்கு முத்தாக’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ உட்பட பல படங்களை தயாரித்து இயக்கியவர் ராசு மதுரவன். சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாய் புற்று காரணமாக இறந்து போனது உங்களுக்கு எல்லாம் நினைவில் இருக்கும்.அப்போது கடைசியாக தான் பண்ணின படத்துக்கு சொந்த கிராமத்தில் கட்டியிருந்த வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்துதான் மதுரை அன்புவிடம் பணம் வாங்கியிருக்கிறார்.

ஃபைனான்சியர் அன்புசெழியனின் அதிரவைக்கும் இன்னொரு பக்கம்..!?

இது பற்றி நெருங்கிய நண்பர்களுக்குகூடத் தெரியாதாம். எதிர்பாராமல் ராசு மதுரவன் இறந்ததும்,அவருக்கு நிறைய கடன் இருந்ததும் தெரிய வந்த அன்பு, ராசு மதுரவன் மனைவியை அழைத்து ஒரு ரூபாய் கூட வாங்காமல் வீட்டு பத்திரத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார்.சமீபத்தில் அந்தப்பக்கம் படப்பிடிப்புக்காக போன நடிகர் ஒருவர் நலம் விசாரிப்பதற்காக போன இடத்தில் இப்படியொரு தரமான சம்பவம் நடந்திருப்பது வெளியில் தெரியவந்திருக்கிறது!

Share this story