நானும் பாலியல் தொல்லைகளைச் சந்தித்தேன்… நடிகை அனுஷ்காவின் பரபரப்பு குற்றச்சாட்டு!

நானும் பாலியல் தொல்லைகளைச் சந்தித்தேன்… நடிகை அனுஷ்காவின் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்வது காலம் காலமாக அரங்கேறி வருகிறது. எவ்வளவு தான் நாடு முன்னேற்றம் அடைந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மட்டும் குறைந்த பாடில்லை. மாறாக கூடிக்கொண்டே தான் வருகிறது.

திரைத்துறையில் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டே தான் இருந்து வருகிறது. மீடூ என்ற பெயரில் திரைத்துறை பிரபலங்கள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை உலகறியச் செய்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை அனுஷ்காவும் தான் பாலியல் தொல்லைகளை சந்தித்தாகத் தெரிவித்துள்ளார். நடிகை அனுஷ்கா தென்னிந்தியாவின் முன்னணி நடிகை. அவருக்கே பாலியல் தொல்லை என்றதும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் பாலியல் தொல்லைகளைச் சந்தித்தேன்… நடிகை அனுஷ்காவின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அனுஷ்கா கூறியதாவது, “சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் புகாரளித்து வருகின்றனர். இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பதில்லை என்று சொல்லமாட்டேன். திரைதுறையே கவர்ச்சியானது தான். அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது. பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் பாலியல் தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை. ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story