சிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி!

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி!

சிரஞ்சீவி நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆச்சார்யா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி!

இந்தப் படத்தில் சிரஞ்சீவி அரசு அதிகாரி, நக்சலைட் என இரு வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆச்சர்யா படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன.

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி!

தற்போது ஆச்சார்யா படத்தில் அரவிந்த சாமி வில்லனாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அரவிந்த் சாமி ”தனி ஒருவன்’ படத்தில் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதையடுத்து ‘போகன்’ படத்திலும் வில்லனாக நடித்தார்.

பின்னர் அவருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ஆச்சார்யா படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story