கோடி அருவி கொட்டுதே உன்னாலே… காலைக் கதிரவனின் கதிர்வீச்சில் கண் மயக்கும் ‘அருவி’ நடிகை அதிதி பாலன்!
நடிகை அதிதி பாலன் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்பு 2017-ம் ஆண்டில் வெளியான ‘அருவி’ படம் அவரை கோலிவுட் முழுவதும் பிரபலமாக்கியது.
மேலும் ‘அருவி’படத்தில் நடித்தது அவருக்கு பல பாராட்டுக்களைப் பெற்றது. ஒற்றைப் படத்திலே தான் எவ்வளவு திறமையான நடிகை என்பதை நிரூபித்துக் காட்டினார் அதிதி பாலன். அடுத்து நிவின் பாலி நடிக்கும் ஒரு மலையாள படத்தில் அதிதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
மற்ற நடிகைகளைப் போல அதிதி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதில்லை. அவ்வப்போது போட்டோஷூட் நடத்தினாலும் அவை தரமானதாக இருக்கும். இப்போது அதிதி வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் காலைக் கதிரவனின் கதிர்வீச்சில் கண் மயக்கும் வனப்புடன் தோற்றமளிக்கிறார் அதிதி பாலன்.