‘ஓ மை கடவுளே’ வெளியாகி ஓராண்டு நிறைவு… மகிழ்ச்சியில் பொங்கிய அசோக் செல்வன்!

‘ஓ மை கடவுளே’ வெளியாகி ஓராண்டு நிறைவு… மகிழ்ச்சியில் பொங்கிய அசோக் செல்வன்!

‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து அசோக் செல்வன் படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் , வாணி போஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே‘ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்தப் படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.

‘ஓ மை கடவுளே’ வெளியாகி ஓராண்டு நிறைவு… மகிழ்ச்சியில் பொங்கிய அசோக் செல்வன்!

தற்போது அசோக் செல்வன் இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்த வருடம் இதே நாளில் தான், எங்களின் ஓ மை கடவுளே படம் உங்கள் இதயங்களை வெல்லுமா என்பதை அறிய நாங்கள் பதற்றத்தில் இருந்தோம்.

த்ரில்லர், ஹாரர் படங்கள் போல ரொமான்டிக் காமெடி படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாது. இவ்வளவு இளம் வயதில் நீங்கள் படம் தயாரிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஒரு பின்னுதவி இல்லாமல் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய முடியாது.

‘ஓ மை கடவுளே’ வெளியாகி ஓராண்டு நிறைவு… மகிழ்ச்சியில் பொங்கிய அசோக் செல்வன்!

இதே நாளில் நாங்கள் அவை எல்லாத்தையும் நாங்கள் உடைத்தெறிந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. என் குழுவுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டுள்ளேன். பார்வையாளர்களுக்கும் தான். மக்கள் தங்கள் சொந்தப் படத்தைப் போல ஆதரித்து கொண்டாடியதற்காக உங்களுக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளேன்.

வணிக ரீதியான வெற்றி எனக்கும் எனது அணிக்கும் கிடைத்த பெரிய வெற்றியாக இருந்தாலும், படம் பார்த்தபின் மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த உணர்ச்சிகரமான செய்திகளும் அழைப்புகளும், படம் அவர்களின் வாழ்க்கையில் இந்தப் படம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னதும், நாங்கள் உண்மையில் எதோ செய்துள்ளோம் என்று எங்களுக்கு உணர்த்தியது .

ஓ மை கடவுளே நடிகர்கள் மற்றும் குழு, நீங்கள் எனது குடும்பம் போல என்பதால் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை, நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நன்றி! விஜய் சேதுபதி அண்ணா எங்கள் படத்தில் நடித்தது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் அதை எனக்காக மட்டுமே செய்தார். நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.

மீண்டும் பார்வையாளர்களுக்கு நன்றி, நான் உன்னை நேசிக்கிறேன்! தைரியமாக எனது கனவுகளைத் துரத்த தைரியத்தையும் நம்பிக்கையையும் எனக்குத் தந்திருக்கிறீர்கள். நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி,

இதுக்கு மேலேயும் சொல்லணும்னா, உனக்கு சொன்னா புரியாது மச்சா.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story