தொழிலதிபருடன் லிவிங் டுகெதரா??!.. வதந்திகளால் கடுப்பான பிக்பாஸ் ஜுலி..
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் ஜூலி. பின்பு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். முதலில் ஜூலியை பாராட்டி வந்த மக்கள், காலப்போக்கில் அவரது நடவடிக்கைகளால் திட்டித்தீர்த்து விட்டனர்.. நிறைய வெறுப்புகளை சம்பாதித்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜூலியை, இப்போதும் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பதுண்டு..
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஆங்கராக இருந்து வந்த ஜூலி, ஒரு சில குறும்படங்கள் மற்றும் திரைபடங்களில் நடித்துள்ளார். தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் ( Pubg) என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்..இது ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்..
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்குத் திருமணம் என்று செய்தி பரவியது. பிரபல தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்க இருப்பதாக கூறப்பட்டது.. ஆனால் இது போலியானது என்று ஜூலி விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், தொடர்ச்சியாக தொழிலதிபருடன் ஜூலி லிவிங் டூகெதரில் வாழ்ந்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவிய வண்ணமே இருந்தன..
இதனால் கடுப்பான ஜூலி, தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.. அதில், “போலிச் செய்தியைப் பரப்பி என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. ஊடகங்களில் என் திருமணம் தொடர்பாக சுற்றிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் போலியானது” என்று தெரிவித்துள்ளார்.
Shame on u to spread fake news and spoil my name.. Please do not encourage pages that defame a person like this #cyberbullying and kindly report this page.. And news regarding my marriage that is circulating in the media is totally fake. pic.twitter.com/X24TO6wFKy
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) August 1, 2020