இந்த ஒரு காரணத்துக்காக தான் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டேன்... 'பிரம்மாஸ்திரா' குறித்து நாகார்ஜூனா!

nagarjuna-33

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் பிரம்மாஸ்திரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் இருக்கிறார். ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் இந்தப் இந்தப் படத்திற்கு கதை அமைக்கப்பட்டுள்ளது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறது.

Nagarjuna

இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார். 

படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரன்பீர்கபூர், நாகர்ஜூனா, ராஜமௌலி ஆகியோர் சென்னையில் பிரமாண்ட விழாவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 

இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கூறியதாவது..,

Nagarjuna
இயக்குனர் அயன் ஒரு காமிக் புத்தகத்துடன் என்னை அணுகினார், அதை படிக்க சொன்னார். அதில் எனது கதாபாத்திரத்தின் முழு தகவலும் இருந்தது. எனது கதாபாத்திரம் நந்தி அஸ்திரத்தை மையப்படுத்தி இருந்தது. எனக்கு இதிகாசங்கள் மேல் எப்பவும் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனால் இதிகாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்ட கதை என்பதாலே நான் இதில் நடிக்க ஒத்துகொண்டேன். படத்தின் விஷுயல்கள் சிறப்பாக வந்துள்ளது. அயன் உடைய 10 வருட உழைப்பு இந்த திரைப்படம். ரன்பீர் ஆலியா மிகச்சிறந்த உழைப்பாளிகள். சினிமா மீது காதலுடையவர்கள். இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும்

இயக்குநர் SS ராஜமௌலி கூறியதாவது..,

Nagarjuna
நான் இங்கு இயக்குனராக வராமல், திரைப்படத்தை வழங்கும் ஒருவராக வந்திருக்கிறேன். பிரமாஸ்திரம் இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கபட்ட ஒரு கற்பனை கலந்த கதை தான் இது. இந்த திரைப்படம் ஒரு 8 வருட கடின உழைப்பு. இந்த படத்தில் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி.

Share this story