படப்பிடிப்பில் எகிறிய பிபி... திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன் !

படப்பிடிப்பில் இதயத்துடிப்பு அதிகரித்ததால் நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். கன்னடத்தில் வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற மாநில மொழி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கோச்சடையான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.
தனது அழகால் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். சூப்பர் ஹிட் படமான ‘பத்மாவதி’ படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் ரன்வீர் சிங்குடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இந்திய சினிமாவில் ஜொலிக்கும் தம்பதியாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை திடீரென தீபிகாவுக்கு இதய துடிப்பு அதிகரித்துள்ளது. அதனால் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தீபிகாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது பிபி அதிகமானதே காரணம் என்றும், ஒய்வெடுக்க பரிந்துரை செய்து வீட்டிற்கு அனுப்பினர். இதனால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.