நடிகை ரைசா முகம் வீங்கிய விவகாரம்… மாறிமாறி நோட்டீஸ் வழங்கியதால் பரபரப்பு…
முகப்பொலிவு சிகிச்சை அளித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் மீது ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ரைசா தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் முக வீக்கத்துடன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். முகப்பொலிவு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 17ம் தேதி டாக்டர் பைரவியிடம் சென்றிருக்கிறார் ரைசா. சிகிச்சை முடுடிந்தபிறகு ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதுடன் முகம் வீங்கியது.

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்தால் கோபமடைந்த ரைசா, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவிக்கு நோட்டீஸ் அனுப்பினார். 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடி, நிவாரணம் பெற வேண்டிருக்கும் என ரைசா எச்சரிக்கை விடுத்தார்.

மருத்துவமனையின் மீது தேவையற்ற அவதூறு பரப்பும் ரைசா, மானநஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் டாக்டர் பைரவி. இந்த குறித்து மருத்துவமனை மீது களங்கம் கற்பிக்கும் வகையில் நாடகமாடி வரும் ரைசா, மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என பைரவி கூறியுள்ளார். நடிகை ரைசாவும், டாக்டர் பைரவியும் மாறிமாறி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.