தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள டாப்ஸி... அவமானங்களை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றியுள்ள சாதனை நடிகை!

taapsee-pannu-4

நடிகை டாப்ஸி புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார். பாலிவுட் தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டாப்ஸி தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு Outsider FIlms  என்று பெயர் வைத்துள்ளார்.  டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர்.  எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் Outsider FIlms என்று பெயர் வைத்துள்ளார்.

"கடந்த ஆண்டு இந்த இந்திய திரைப்படத் தொழில் கனவில் மூழ்கி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டருந்த நிலையில், நான் தற்போது அதில் நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டுள்ளேன். ஆனால் உண்மையில் என் வழியில் சென்றே நான் நீந்த கற்றுக்கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பொது நபராக கனவு காணாத ஒருவருக்கு, என் மீதும், என் வேலையின் மீதும் இவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் அளித்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.


அதற்காக திருப்பிச் செலுத்துவதற்கான நேரம், வந்துவிட்டது.  ஏனென்றால் பெரும் சக்தியுடன் பெரும் பொறுப்புகளும் வருகிறது. எனவே நான் சிறப்பாக செயல்பட  வாழ்த்துங்கள். ஏனென்றால் நான் சிறந்தவற்றைக் கொண்டுவருவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன், வெளியில் இருந்து பார்க்கும் போது சிறப்பாக இருக்கும்." என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி பலமுறை வெளியில் இருந்து வந்தவர் என்று கூறி அவமானப்படுத்தப்படுவதாக பேச்சு உண்டு. எனவே தான் அவர் தனது தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் Outsider FIlms என்று பெயர் வைத்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story