இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளான பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன்!

amitabh-bacchan-34

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அமிதாப் பச்சன். இந்திய அளவில் பிரபல அறியப்படும் அமிதாப் பச்சன் நேற்று தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே அவர் 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர். தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


"எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. என் அருகாமையிலும், என்னைச் சுற்றிலும் இருந்தவர்கள், தயவுசெய்து உங்களைப் பரிசோதித்து, உறுதி செய்து கொள்ளவும்" என்று ட்வீட் வெளியிட்டுள்ளார். 

இரண்டாவது முறையாக அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

இதற்கிடையில் அமிதாப் பச்சன் பிரம்மாஸ்திரா, மற்றும் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Share this story