சல்மான் கான் கார் விபத்தை வைத்து புதிய ஆப் உருவாக்கிய நிறுவனம்... தடை விதித்த நீதிமன்றம்!

salman-khan-bhoi

சல்மான் கான் குறித்து உருவாக்கப்பட்ட செயலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

2002 -ம் ஆண்டு சல்மான் கான் கார் ஒரு பேக்கரியின் மீது மோதி ஒருவர் பலி மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அடுத்தகட்ட விசாரணையில் சல்மான் கான் காரை ஓட்டவில்லை என்று நிரூபித்ததால் 2015-ம் ஆண்டு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  

salman-bhoi3

இந்நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்த சம்பத்தை விளையாட்டாக உருவாக்கியுள்ளனர். மேலும் அந்த செயலுக்கு சல்மான் பாய் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த செயலியால் தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சல்மான் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

salman

வாதங்களைக் கேட்ட பிறகு, மும்பை நீதிமன்றம் பகோடி ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அந்த செயலியைத் தொடங்குவது, பரப்புவது அல்லது மறுசீரமைப்பது ஆகியவற்றிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சல்மான் கான் தொடர்பாக எந்த ஒரு செயலியையும் உருவாக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 

Share this story