கோவாவில் ஆபாச போட்டோஷூட் நடத்திய நடிகை மீது ஃஎப்ஐஆர் பதிவு!
கோவாவில் ஆபாச போட்டோஷூட் நடத்தியதாக நடிகை பூனம் பாண்டே மீது ஃஎப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவின் கனகோனா சாப்போலி அணையில் எடுத்துக்கொண்ட நிர்வாணக் காட்சி விடீயோக்கள் மற்றும் போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

“பூனம் பாண்டேவின் வீடியோ கோவாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கனகோனாவில் உள்ள சபோலி அணையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மிகவும் பாதுகாப்பானது மற்றும் கோவா அரசாங்கத்தின் நீர்வளத் துறையின் சொத்து. கோவாவில் என்டர்டெயின்மென்ட் சொசைட்டி பொதுவாக கோவாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கிறது. இந்த ESG அமைப்புக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தான் தலைவர். பாஜக அரசு கோவாவை ஆபாச இடமாக ஊக்குவித்து வருகிறது. இது மாநிலத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறது.” கோவா ஃபார்வர்டின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான துர்கதாஸ் காமத் தெரிவித்துள்ளார்.
பூனம் பாண்டேவின் இந்த விடீயோக்கள் மற்றும் போட்டோஷூட் குறித்து கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு, போலீஸில் புகார் அளித்துள்ளதை அடுத்து பூனம் பாண்டே மீது ஃஎப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கனகோனா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மீது பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை படமாக்கியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூனம் பாண்டே சில தினங்களுக்கு முன்பு தன் கணவர் மீது துன்பறுத்தல் புகாரளித்த போது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.