5 நாளில் 500 கோடி வசூல்.. மிகப்பெரிய சாதனையை படைத்த ஷாருக்கானின் ‘பதான்’ !

pathan

 ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 5 நாட்களில் 550 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் நடிப்பில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

pathan

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த 25-ஆம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதற்கிடையே இப்படம் வெளியாவதற்கு முன்பு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் தொடர்ந்து பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் இந்த படம் வெற்றிப்பெறுமா என சந்தேகமும் எழுந்தது. 

pathan

இந்நிலையில் இப்படம் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் 5 நாளில் 556 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றிற்கு 100 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 275 கோடி வசூலித்துள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தின் வசூல் மிரள் வைக்கும் வகையில் உள்ளது. 

Share this story