சுதா கொங்கரா- சூர்யா கூட்டணியில் இந்தியிலும் ரீமேக் ஆகும் 'சூரரைப் போற்று'!

soorarai-3

சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அது சூர்யாவே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கராவின் இயக்கம், சூர்யா மற்றும் மற்ற நடிகர்கள் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. படம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியது. சூரரைப் போற்று படத்தை சூர்யா தனது 2D என்டரடெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதை சுதா கொங்காரா இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபல இந்தி நடிகர் இந்த ரீமேக்கில் நடிகர் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தி ரீமேக்கை சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் மூவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தின் மூலம் சூர்யா முதன்முறையாக இந்தியில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 

இதுகுறித்து சூர்யா பேசியபோது, ‘சூரரைப்போற்று’ படத்திற்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் கரு அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது" என்று தெரிவித்துள்ளார். 

Share this story