"ராசியில்லாதவள்' என்று தென்னிந்திய சினிமாவால் புறக்கணிக்கப்பட்டேன்" -நடிகை வித்யாபாலன்

"ராசியில்லாதவள்' என்று தென்னிந்திய சினிமாவால் புறக்கணிக்கப்பட்டேன்" -நடிகை வித்யாபாலன்

பாலிவுட் நடிகை ‘வித்யாபாலன்’ நடிப்பில் வெளிவந்துள்ள ‘சாகுந்தலாதேவி’ திரைப்படம் சில நாட்களுக்கு முன் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இவர் ஒரு சிறந்த நடிகையாவார்.பல விருதுகளும் வென்றுள்ளார்.பல போல்டான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.பாலிவுட்டை சேர்ந்த மனிஷா கொய்ராலா,ஐஸ்வர்யாராய் போன்ற பல திறமையான நடிகைகள் தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்துள்ளனர். ஆனால் வித்யாபாலன் பெரிதும் தென்னிந்திய திரைப்படங்களில் தோன்றாமலேயே இருந்தார்."ராசியில்லாதவள்' என்று தென்னிந்திய சினிமாவால் புறக்கணிக்கப்பட்டேன்" -நடிகை வித்யாபாலன்
இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இப்போது அவர் மனம் திறந்துள்ளார். அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் ஒப்பந்தம் ஆகி இருந்துள்ளார். அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தநிலையில் அப்படம் கைவிடப்பது. அந்நேரம் வித்யா 8 படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தார்.
"ராசியில்லாதவள்' என்று தென்னிந்திய சினிமாவால் புறக்கணிக்கப்பட்டேன்" -நடிகை வித்யாபாலன்
 
அனால் அப்படங்களில் இருந்து ஒவ்வொரு காரணம் கூறி வித்யா நிராகரிக்கப்பட்டார். வித்யா,ராசி இல்லாதவள் என்றும் குண்டாக இருப்பதாகவும் கூறி புறக்கணிப்பட்டுள்ளார். இவ்வளவு இன்னல்களுக்கு பின் சில தமிழ் பட வாய்ப்புகளும் வந்தன. மலையாளம் தான் கைவிட்டது அனால் தமிழ் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அதிர்ச்சியாக,அந்த வாய்ப்புகள் அனைத்தும் வேறு நடிகைகளுக்கு கைமாறிவிட்டன.

இதனால் மனமுடைந்து போன வித்யா தன அம்மாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அவரோ, “பிரார்த்தனை செய் எல்லாமே சரி ஆகிடும்” என்று நம்பிக்கை கொடுத்துள்ளார். அதன் பின் விடாமுயற்சியால் அவர் பாலிவுட்டில் கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
 
.-மா மணிகண்டன்
 

Share this story