மீண்டும் இணைகிறதா சுந்தர்.சி, விஷால் கூட்டணி ?

vishal

கடந்த ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா எனும் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்க சுந்தர். சி படத்தை இயக்கியிருந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. எனவே 12 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர். சி, விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த கூட்டணி ஆம்பள திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vishal
மேலும் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2 ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் சுந்தர். சி இயக்கத்தில் உடனடியாக விஷால் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Share this story