தவறான செய்தியை பரப்பவேண்டாம்… என் கடமையை நான் செய்துவிட்டேன் – இயக்குனர் லிங்குசாமி

தவறான செய்தியை பரப்பவேண்டாம்… என் கடமையை நான் செய்துவிட்டேன் – இயக்குனர் லிங்குசாமி

நான் எனது கடமையை செய்தது போல, நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று லிங்குசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழில் ரன், பையா, சண்டக்கோழி, அஞ்சான், வேட்டை, பீமா, தீபாவளி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. முன்னணி இயக்குனராக வலம் வரும் இவரின் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு உள்ளது. விஷாலின் சண்டக்கோழி படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் இவருக்கென தனி இடம் கிடைத்தது.

தவறான செய்தியை பரப்பவேண்டாம்… என் கடமையை நான் செய்துவிட்டேன் – இயக்குனர் லிங்குசாமி

தொடர்ந்து தமிழில் பல படங்களை இயக்கி வந்த லிங்குசாமி, தற்போது ‌தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த லிங்குசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், என் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன். சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல, நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளது.

Share this story