ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதி உதவி
படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
பா.ரஞ்சித் தங்கலான் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கி வரும் படம் வேட்டுவம். இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவர் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`வேட்டுவம்' படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 லட்சம் வழங்கினார்.

