வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஷூட்டிங் நிறைவு !

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஷூட்டிங் நிறைவு !

வைபவ்- பார்வதி நாயர் நடிக்கும் ஆலம்பனா படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஷூட்டிங் நிறைவு !

திரைப்படங்களில் கதைகளில் வித்தியாசம் காட்டி வந்த காலம் மாறி, படத்தின் டைட்டில்களிலே வித்தியாசம் காட்ட ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் இயக்குனர்கள். வித்தியாசமான ஒன்றை படத்தில் காட்டினால்தான் படம் ஓடும் என்பதால்தான் இதுபோன்று யோசிக்க ஆரம்பிச்சு விட்டனர்.

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஷூட்டிங் நிறைவு !

அறிமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்கும் படம் ஆலம்பனா.. இந்த பெயரை கேட்டாலே ஏதோ குழந்தைகளுக்காக எடுக்கப்படுகின்ற மாயாஜாலம் கதை போன்று உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். ஹீரோயினாக பார்வதி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஷூட்டிங் நிறைவு !

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் ஷூட்டிங் இன்று முடிவு பெற்றதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

Share this story