சர்ச்சையான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்… வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி…

சர்ச்சையான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்… வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி…

தனது பிறந்த நாளையொட்டி பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரத்திற்கு, நடிகர் விஜய்சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது 43-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் இந்த பதிவு உள்ளதாக கூறி இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர்களை போலீசார் கைதுசெய்திருந்த நிலையில், இந்த விகாரகம் கடும் விவாதத்தை கிளப்பிது.

சர்ச்சையான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்… வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி…

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.”

“இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this story