மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

நடிகை சனுஷா மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை சனுஷா காசி, பீமா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் ‘ரேணிகுண்டா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் எத்தன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்சி’ படத்தில் நடித்திருந்தார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

இந்நிலையில் சனுஷா தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியிருப்பதாவது:

“கடந்த சில மாதங்களில் நான் என் புன்னகையை மிகவும் தவறவிட்டுள்ளேன். லாக்டவுன் ஆரம்ப மாதங்களில், தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நான் ஒரு கடினமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வகையிலும் அது ஒரு மோசமான காலம். நான் நான் கடந்து வந்தவற்றைப் பற்றி சிந்திக்கும்போது கூட என் உடம்பில் புல்லரிக்கிறது. ஆனால் இப்போது நான் வலுவாக உணர்கிறேன் – இந்த முழு அனுபவத்தின் மூலமும் நான் வளர்ந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு நடப்பதை என் சகோதரனிடம் மட்டுமே சொன்னேன். நான் தவறுதலாக ஏதேனும் செய்துகொண்டால் அவனுக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நான் உணர்ந்தபோது, நான் உதவியை நாட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு கட்டத்தில் நான் இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்,.ஒரு நண்பருடன் சில நாட்கள் தங்குவதற்காக வயநாடு சென்றேன். இயற்கையுடனும் மலைகளுடனும் நேரத்தை செலவிடுவது உதவியது.” என்றார்.

மன அழுத்தத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this story