கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா இருக்கும் ’த்ரிஷ்யம் 2’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்..

கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா இருக்கும் ’த்ரிஷ்யம் 2’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்..

மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம் மலையாளத்தில்  சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகள் ரீமேக் செய்யப்பட்ட இந்தப்படம், அந்ததந்த மொழிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றது.
கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா இருக்கும் ’த்ரிஷ்யம் 2’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்..
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இதே கூட்டணியில்  ‘த்ரிஷ்யம்-2’ என்கிற பெயரிலேயே உருவாகிறது. எதிர்பாராத விதமாக பிரச்னையில் சிக்கிகொல்லும் மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன் ஜார்ஜ் குட்டியின் வாழ்க்கைதான் கதைக்களம். இதே ஜார்ஜ்குட்டியை மையப்படுத்தியதே இரண்டாம் பாகத்தின் கதையும் என்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்..
கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா இருக்கும் ’த்ரிஷ்யம் 2’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்..
ஆனால் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் இன்னும் த்ரில்லிங்காக இருக்கும் என்றும், அதேசமயம் முதல் பாகத்தை போல இதில் கொலைகள் ஏதும் தொடராது என்றும் கூறியிருக்கிறார்.. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா என்கிற ஆச்சர்யம் ஏற்படுவது உண்மைதான்.. ஆனால் த்ரிஷ்யம் வெளியாகி வெற்றி பெற்றபோது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும் காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து அதிருப்தியும் கண்டனமும் எழுந்தன” என்று தெரிவித்தார்.
கொலை இல்லாமல் ஒரு த்ரில்லிங் படமா இருக்கும் ’த்ரிஷ்யம் 2’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்..
” அதாவது ஒரு கொலையை செய்வதும் அதை மறைத்தலும் மிகப்பெரிய குற்றம்.. ஆனால் அதை இந்தப்படம் நியாயப்படுத்தும் விதமாக இருக்கிறது என சலசலப்பு எழுந்தது.. அதனை மனதில் கொண்டு தான் த்ரிஷ்யம்-2  ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் வித்தியாசமாக மாற்றியிருக்கிறாராம்  இயக்குனர் ஜீத்து ஜோசப்.  கேரளாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் -17ஆம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Share this story