பிரபல இயக்குனர் கொரானா தொற்றால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
பிரபல இயக்குனர் சுந்தர்.சி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரானாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. அதன் விரீயம் கடந்த ஆண்டைவிட தற்போது பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கடும் கட்டுபாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. இரவு ஊரடங்கை அமல்படுத்தலாமா என யோசித்து வருகின்றனர் அதிகாரிகள். தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் முன்பைவிட விரீயமானதா என கண்டறிய ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொரானா வேகமாக பரவி வருகிறது. அதனால்தான் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரானா தொற்று அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சினிமா துறையில் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் மாதவன், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி தற்போது கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் சுந்தர் சியின் மனைவி குஷ்பூ பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய கணவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது சிகிச்சைப்பெற்று நலமுடன் இருக்கிறார். அவருடன் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.