“ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்”… கொரோனா பாதித்த இயக்குனரின் அதிரடி பதிவு!

“ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்”… கொரோனா பாதித்த இயக்குனரின் அதிரடி பதிவு!

இயக்குனர் வசந்தபாலன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மிகவும் தீவிரமாகி வருகிறது. மீண்டும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தினம் தினம் கொரோனா பாதித்தோர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டு வருகிறது. திரைத்துறையில் பெரும்பாலோனோர் கூட கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

“ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்”… கொரோனா பாதித்த இயக்குனரின் அதிரடி பதிவு!

நடிகர் சூர்யா முதல் கடைசியாக அம்மு அபிராமி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இயக்குனர் வசந்தபாலன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை.என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story