மூன்றாவது முறையாக இணையும் திரிஷ்யம் கூட்டணி.. விரைவில் அறிவிப்பு

மூன்றாவது முறையாக இணையும் திரிஷ்யம் கூட்டணி.. விரைவில்  அறிவிப்பு

நடிகர் மோகன் லாலும், ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக ‘திரிஷ்யம் 3’ படத்திற்காக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெற்றிப்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்கும் பலமொழிகளில் உருவாகி வருகிறது. இதற்கிடையே ‘திரிஷ்யம் 3’ உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக மோகன் லாலும், ஜீத்து ஜோசப்பும் இணைந்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது ‘ப்ரோஸ்’ என்ற மாயாஜால படத்தை இயக்கி‌ வருகிறார்.அதோடு ‘லூசிபர் 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Share this story