துபாயில் படப்பிடிப்பை முடித்த ‘எனிமி’ படக்குழு.. நெக்ஸ்ட் சென்னை தான்!

துபாயில் படப்பிடிப்பை முடித்த ‘எனிமி’ படக்குழு.. நெக்ஸ்ட் சென்னை தான்!

துபாயில் நடந்து வந்த எனிமி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார்.

துபாயில் படப்பிடிப்பை முடித்த ‘எனிமி’ படக்குழு.. நெக்ஸ்ட் சென்னை தான்!

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதையடுத்து சிறிய இடைவெளிக்குப் பின்னர் படக்குழு துபாய் கிளம்பினர். அங்கு சுமார் ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடந்தது. அதை அடுத்து தற்போது அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

துபாயில் படப்பிடிப்பை முடித்த ‘எனிமி’ படக்குழு.. நெக்ஸ்ட் சென்னை தான்!

துபாயில் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் விஷால் படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் தயாரிப்பாளர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story